×

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

செங்கல்பட்டு, மே 10: கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், குன்னவாக்கம் காலனியை சேர்ந்தவர் அமுல்ராஜ் (36). இவர், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கைது செய்யச் சென்றனர். அப்போது, அமுல்ராஜ் போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவானார். இந்நிலையில், குன்னவாக்கம் பகுதியில் அமுல்ராஜ் மீண்டும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து சென்று வீட்டில் இருந்த அமுல்ராஜை கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 1250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Amulraj ,Gunnavakkam Colony, Chengalpattu District ,
× RELATED செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!!